இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் செஞ்சோலை பகுதியில் 61 சிறுமிகளை கொலைசெய்த இலங்கை அரசை கண்டித்து அஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் நடைபெற உள்ளது.
வரும் 24-08-2006 அன்று மாலை புதுவை சிங்கார வேலர் சிலையிலிருந்து தொடங்கி கடற்கரை காந்தி சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
புதுவையில் 21-08-2006 அன்று இக்கொலை நிகழ்ச்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதே செஞ்சோலை நிகழ்ச்சியைக் கண்டித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
வரும் 29-08-2006 செவ்வாய் அன்று அனைத்துக் கட்சிகள் சேர்ந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்ததை (பந்த்) புதுவை ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பு நடத்துகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.
2 comments:
புதுவை மக்களுக்கு நன்றி!
உடனடியாக அவ்வாறு செய்யவேண்டாம் என்று சில அமைப்புகள் கேட்டுக்கொண்ட படியால் நடைபெறுவதாக இருந்த பந்த் கைவிடப்பட்டது.
Post a Comment